மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்
x

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்- நாளை நடக்கிறது

திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வினை கருத்தில் கொண்டு அரசு செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்றான அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) திருவண்ணாமலை அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

முகாமில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்கேற்பு, தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பயனாளிகளை தேர்வு செய்தல், சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க பயனாளிகளை தேர்வு செய்தல்,

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக படித்த வேலையில்லா மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறுதல் மற்றும் மத்தியஅரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவுகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

தனியார் வேலை வாய்ப்புக்கு மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்து அன்றைய தினமே பணி ஆணையும் வழங்கப்படவுள்ளது.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story