பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கலெக்டர் மோகன் வழங்கினார்

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேச்சு போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சத்தியப்பிரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story