கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவுக்கு தடை


கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவுக்கு தடை
x

கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

மதுரை,

கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மனு தாக்கல்

நெல்லை மாவட்டத்தில் அனுமதி பெற்ற கிரசர், கல்குவாரி உரிமையாளர்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த மே மாதம் திடீரென பாறை சரிந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியானார்கள்.

இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் குவாரிகள், கிரசர்கள் இயங்க தடை விதித்து வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது. இதனால் பல்வேறு வகையில் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே டிரான்சிட்பாஸ் அனுமதி வழங்கும்படி நெல்லை புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இடைக்கால தடை

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர்கள் கிரசர், கல்குவாரிகள் நடத்தி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட குவாரியில் விபத்து நடந்ததால், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகள் மற்றும் கிரசர் யூனிட்களை மூடுமாறு நெல்லை மாவட்ட நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவிட்டு உள்ளது.

எந்தவித அடிப்படையும் இன்றி, இது போன்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகார பூர்வமாக இல்லாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, நெல்லை மாவட்டத்தில் அனுமதி பெற்ற குவாரிகளில் இருந்து கல், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்ற சிறு கனிமங்களை சேமித்து வைக்கவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவும் தடை விதித்து பிறப்பித்த வாய்மொழி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் மனுதாரர்கள் கோரிக்கை குறித்து, நெல்லை கனிம வளத்துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஆகஸ்டு 2-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Related Tags :
Next Story