திண்டுக்கல்லில் தி.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் தி.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல்லில் தி.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இளைஞர் அணி மாநில துணை செயலாளர் கமல்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் சக்திசரவணன், செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் ஆனந்த முனிராசன், மண்டல தலைவர் நாகராசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வங்கி எழுத்து தேர்வில் தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்காக வங்கி தேர்வில் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயலை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.



Next Story