பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் 9-ந்தேதி நடக்கிறது


பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் 9-ந்தேதி நடக்கிறது
x

பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் வரும் 9-ந்தேதி நடக்கிறது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு, காஞ்சீபுரம் வட்டத்தில் சிறுகாவேரிபாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் பினாயூர், வாலாஜாபாத் வட்டத்தில் ஆற்பாக்கம் ,ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் காந்தூர், குன்றத்தூர் வட்டத்தில் செரப்பனஞ்சேரி ஆகிய கிராமங்களில் பொது வினியோகதிட்ட குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும் பொது மக்கள் தங்கள் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், நகல் ரேஷன்கார்டு, செல்போன் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய ரேஷன்கார்டு பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story