தோல் தொழிற்சாலையில் மலைப்பாம்புகள் பிடிபட்டன


தோல் தொழிற்சாலையில் மலைப்பாம்புகள் பிடிபட்டன
x

வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் மலைப்பாம்புகள் பிடிபட்டன.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோவிந்தாபுரம் ஊராட்சி ஏரி மின்னூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தபோது தொழிற்சாலை பின்புறம் சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது 15 அடி நீளமுள்ள 2 மலைப்பாம்புகள் மற்றும் ஒரு பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியில் உள்ள பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தொழிற்சாலையில் இருந்த 3 பாம்புகளை பிடித்து வாணியம்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.


Next Story