11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது


11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது
x

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது.

அரியலூர்

தமிழ் தேர்வு

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. அவர்களுக்கு நேற்று தமிழ் தேர்வு நடந்தது. இந்த ஆண்டு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி காலாண்டு தேர்வு பொதுத் தேர்வாக நடத்தும் முறை அமல்படுத்தப்பட்டது.

12-ம் வகுப்புக்கு காலையிலும், 11-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வு நடந்தது. 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலை 9.45 மணிக்கு தொடங்கிய தமிழ் தேர்வு மதியம் 12.45 மணி வரை நடந்தது. இதேபோல் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய தமிழ் தேர்வு மாலை 4.30 மணி வரை நடந்தது.

சோதனையிட்டு உள்ளே அனுமதித்தனர்

தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு வரை மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் படித்து கொண்டிருந்தனர். தேர்வு எழுத தேர்வறைக்கு சென்ற மாணவ- மாணவிகளை அறை கண்காணிப்பாளரான ஆசிரியர்கள் சோதனை செய்து, உள்ளே அனுமதித்தனர். தேர்வு எழுத எழுது பொருட்கள் மட்டுமே கொண்டு செல்ல மாணவ- மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. வருகிற 19-ந் தேதி 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆங்கில தேர்வு நடக்கிறது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 19-ந்தேதி காலாண்டு தேர்வு தொடங்குகிறது. அவர்களுக்கு முதல் நாளன்று தமிழ் தேர்வு நடக்கிறது.


Next Story