மாவு மில்களில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல்


மாவு மில்களில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல்
x

சவுளூர் கூட்டு ரோடு, குண்டலப்பட்டியில் மாவு மில்களில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவற்றை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மில் உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

சவுளூர் கூட்டு ரோடு, குண்டலப்பட்டியில் மாவு மில்களில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவற்றை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மில் உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி நேற்று தமிழக-கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி சாலையில் உள்ள டி.வி.எஸ். சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் காய்கறி வண்டிகளிலும் ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த புகாரையடுத்து அந்த வாகனங்களையும் சோதனையிட்டார்.

சேலம் உட்கோட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, முரளி ஆகியோர் நேற்று காவேரிப்பட்டணம் பகுதிகளில் அரிசி ஆலை, மாவு மில்களில் சோதனை செய்தனர்.

2 பேர் கைது

அப்போது சவூளூர் கூட்டு ரோடு அருகில் உள்ள ராஜா என்கிற நிப்பட்ராஜா (வயது 50) என்பவருக்கு சொந்தமான மாவு மில்லில் பதுக்கி வைத்து இருந்த 38 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் 10 மூட்டை கோதுமை, 59 மூட்டையில் இருந்த அரிசி மாவு ஆகியவற்றை பறிமுதல்செய்தனர். இதுதொடர்பாக மில் உரிமையாளர் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல குண்டலப்பட்டியை சேர்ந்த சங்கர் (48) என்பவரது மாவு மில்லில் இருந்த 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு அவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story