பழனியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பழனியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திண்டுக்கல்
பழனி நகர்ப்பகுதியில் தலைவிரித்தாடும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம், பழனி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் இன்று பழனியில் திண்டுக்கல் சாலை உழவர்சந்தை பிரிவு பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், உழவர்சந்தை பிரிவு பகுதியில் பஸ்கள் நிறுத்துவதற்கு என இடம் ஒதுக்கப்பட உள்ளது. இதற்காக, தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. விரைவில் அனைத்து பகுதிகளிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story