சாலையில் விழுந்த கற்கள் அகற்றம்


சாலையில் விழுந்த கற்கள் அகற்றம்
x
தினத்தந்தி 3 Aug 2022 4:52 PM GMT (Updated: 3 Aug 2022 5:05 PM GMT)

சாலையில் விழுந்து கிடந்த கற்கள் அகற்றப்பட்டன.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட மண் சரிவால் சங்கராபுரம்- சேராப்பட்டு சாலையோரங்களில் ஒரு சில இடங்களில் கற்கள் விழுந்து கிடந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்த படத்துடன் செய்தி நேற்று தினத்தந்தி நாளிதழில் வெளிவந்தது. இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சங்கராபுரம்-சேராப்பட்டு சாலையோரங்களில் சரிந்து விழுந்து கிடந்த கற்களை அகற்றினர். இதனால் தற்போது வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வருகின்றனர். இதையடுத்து வாகன ஓட்டிகள் தினத்தந்திக்கு நன்றி தொிவித்தனர்.


Related Tags :
Next Story