ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தகடி கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே தகடி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று திருப்பாலப்பந்தல் போலீஸ் பாதுகாப்புடன் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story