சேலத்தில் ஜவுளி கடையில் பணியாற்றிய 2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு


சேலத்தில் ஜவுளி கடையில் பணியாற்றிய 2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
x

சேலத்தில் ஜவுளி கடையில் பணியாற்றிய 2 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

சேலம்

சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தடுப்பு படையினர், போலீசார், தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககம் மற்றும் சைல்டு லைன் ஆகிய குழுவினர் நேற்று சேலம் கடைவீதி முதல் மற்றும் 2-ம் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 18 வயதுக்குட்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது,' குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. தவறும்பட்சத்தில் கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் மூலமாக குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும்' என்றார்.


Next Story