தி.மு.க. செயலாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


தி.மு.க. செயலாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளராக எஸ்.கே.நவாப் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர் எஸ்.கே.நவாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று 5 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக நகர செயலாளராக நவாப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை யொட்டி, அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும் நவாப்பிற்கு, தி.மு.க. நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் செயலாளர்கள், அமைப்பாளர்கள், தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நகர செயலாளர் நவாப், மதிய உணவு வழங்கினார்.


Next Story