ஓய்வுபெற்ற கிராம உதவியாளர், விஷம் குடித்து சாவு


ஓய்வுபெற்ற கிராம உதவியாளர், விஷம் குடித்து சாவு
x

கூத்தாநல்லூர் அருகே ஓய்வுபெற்ற கிராம உதவியாளர், விஷம் குடித்து உயிரிழந்தார்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முருகையன் (வயது66).இவர் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இந்த நிலையில், முருகையன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று வந்ததால், அவர் மனைவி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த முருகையன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சிமருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story