புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

திருநெல்வேலி

நெல்லை டவுன் வாகையடி முக்கில் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டும், இதற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, கணேசன், பேச்சிராஜா, சுடலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story