நான்கு வழிச்சாலைப்பணிகள் தீவிரம்


நான்கு வழிச்சாலைப்பணிகள் தீவிரம்
x

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான உடுமலையை அடுத்துள்ள குறிஞ்சேரி அருகே நான்கு வழிச்சாலைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர்

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான உடுமலையை அடுத்துள்ள குறிஞ்சேரி அருகே நான்கு வழிச்சாலைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நான்கு வழிச்சாலை

மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தில் பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம் வரை 50 கி.மீ., மடத்துக்குளம் முதல் ஒட்டன்சத்திரம் வரை 45 கி.மீ. மற்றும் ஒட்டன்சத்திரம் முதல் கமலாபுரம் வரை 36 கி.மீ. என மொத்தம் 131 கி.மீ. தூரத்திற்கு இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி கடந்த சுமார் 1½ ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான பிரதான சாலை மட்டுமின்றி பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கிராமப்புறங்களில் புறவழிச்சாலை அமைகிறது.

பணிகள் மும்முரம்

நான்கு வழிச்சாலைக்காக நிலம் எடுக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் அமைத்தல், திட்ட வடிவமைப்பின்படி உயரமாக மண் கொட்டப்பட்டு, ஜல்லிகற்கள் நிரப்பப்பட்டு, தார்ச்சாலை அமைத்தல், சாலையோரங்களில் கான்கிரீட் தடுப்புகள் அமைத்தல், பாலங்கள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய நகர பகுதிகளை நான்கு வழிச்சாலையுடன் இணைக்கும் வகையில் 47 கி.மீ. தூரத்திற்கு அணுகு சாலையும் அமைக்கப்படுகிறது.

நான்கு வழிச்சாலையின் ஒருபகுதி உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கணபதிபாளையம் பிரிவுக்கு அருகில் இருந்து தொடங்குகிறது. இந்த நான்கு வழிச்சாலை குறிஞ்சேரி ஊராட்சி பகுதியில் பெதப்பம்பட்டி சாலை மற்றும் சின்னவீரம்பட்டி ஊராட்சி பகுதியில் திருப்பூர் சாலை, தாராபுரம் சாலை ஆகிய சாலைகளின் குறுக்கே கடந்து உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பம்பட்டி அருகே வந்து இணைகிறது. இந்த நிலையில் குறிஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், உடுமலை-பெதப்பம்பட்டி சாலையின் இரண்டு புறமும் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Related Tags :
Next Story