ஏரியில் மீன் பிடிப்பதை தடுத்ததை கண்டித்து சாலை மறியல்


ஏரியில் மீன் பிடிப்பதை தடுத்ததை கண்டித்து சாலை மறியல்
x

வந்தவாசி அருகே ஏரியில் மீன் பிடிப்பதை தடுத்ததை கண்டித்து சாலை மறியல்

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரி நீரினை மருதாடு மற்றும் கடைசிகுளம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றனர்.

அப்போது மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடைசிகுளம் கிராமத்தினரை மீன் பிடிக்கக் கூடாது என்று தடுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து கடைசிகுளம் கிராம மக்கள் மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, மருதாடு ஏரியில் மீன் பிடிக்க தங்களுக்கும் உரிமை உள்ளதாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து அங்கு வந்த கீழ்கொடுங்காலூர் வடக்கு போலீசார், மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா மற்றும் இன்ஸ்பெக்டர் குமார் சமரசம் செய்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தினால் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story