கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை


கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை
x

உளுந்தூர்பேட்டையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

தனியார் ஓட்டல் முன்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி பெரிய தெருவை சேர்ந்தவர் முகமது அஷ்ரப் அலி மகன் அப்துல் கரீம்(வயது 34). சென்னை அம்பத்தூரில் தொழில் செய்து வரும் இவர் சொந்த வேலை காரணமாக சென்னையில் இருந்து காரில் தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் வந்த போது அப்துல்கரீம் தனது காரை அங்குள்ள தனியார் ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.

நகை-பணம்கொள்ளை

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் பக்கவாட்டு கண்ணகாடி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது காருக்குள் பையில் இருந்த ரூ.1.¾ லட்சம் பணம் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தோடு ஆகியவற்றை காணவில்லை. அப்துல்கரீம் ஓட்டலுக்குள் சாப்பிட சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து மேற்கண்ட நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story