சென்னை மாநகராட்சியில் குப்பை, கட்டடக் கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்


சென்னை மாநகராட்சியில் குப்பை, கட்டடக் கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்
x

சுவரொட்டிகள், குப்பை மற்றும் கட்டடக் கழிவுகள் கொட்டியவர்கள் மீது 22 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 7-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள் மீது 9 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டடக் கழிவுகளை கொட்டியது தொடர்பாக 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயும், 451 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story