மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் ரூ.3 லட்சம் உண்டியல் காணிக்கை


மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் ரூ.3 லட்சம் உண்டியல் காணிக்கை
x

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் ரூ.3 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.

புதுக்கோட்டை

விராலிமலை,

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோவில்கள் செயல் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலும், ஆய்வாளர் யசோதா முன்னிலையிலும் உண்டியல் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 126-ம், 13 கிராம் தங்கமும், 102 கிராம் வெள்ளியும் வசூலாகியிருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, மாதவன் விளக்குபூஜை மகளிர் குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story