ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை


ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:45 PM GMT)

ஊத்தங்கரை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையானது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையானது.

மாட்டு வாரச்சந்தை

ஊத்தங்கரை பஸ் நிலையம் பின்புறம் (வெள்ளிக்கிழமை) மாட்டு வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மாட்டு வாரச்சந்தை கூடியது. கேரளாவைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். கேரள வியாபாரிகள் வருகையால் உள்ளூரை சேர்ந்த விவசாயிகள் அதிகளவு மாடுகளை விற்பனை செய்தனர். இந்த சந்தையில் 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள் நேற்று விற்பனையானது.

ரூ.2 கோடிக்கு விற்பனை

வாரச்சந்தையில் ஒரு மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. மாடுகளை வியாபாரிகள் போட்டி, போட்டு விலை கேட்டதால் சந்தை களைகட்டியது. சந்தையில் நேற்று ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல பொங்கல் பண்டிகை என்பதால் மாடுகளுக்கு தேவையான கயிறுகள், குஞ்சம், மணிக்கயிறுகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் வாங்கி சென்றனர்.


Next Story