சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில்விழிப்புணர்வு போட்டிகளில்வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு


சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில்விழிப்புணர்வு போட்டிகளில்வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:45 PM GMT)

சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. கட்டுரைப் போட்டியில் 2-ம்ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி முத்துபேச்சியம்மாள் முதலிடத்தையும், 2-ம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி வைஷ்ணவி பேச்சியம்மாள் 2-வது இடத்தையும் பெற்றனர். ஓவியப் போட்டியில் 2-ம்ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி நிஷாந்தி முதல் பரிசையும், இரண்டாம் ஆண்டு முதுகலை வணிகவியல் துறை மாணவி நிறைமதி 2-வது இடத்தையும், பேச்சுப்போடியில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி கிருஷ்ணவேணி முதல் பரிசையும், 3-ம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி சிராஜ் இர்பானா 2-வது இடத்தையும் பெற்றனர்.

கவிதைப்போட்டில் இரண்டாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி வைஷ்ணவி பேச்சியம்மாள் முதல் இடத்தையும், முதலாம் ஆண்டு கணினி அறிவியல்துறை மாணவி அகிலண்டேஸ்வரி 2-வது இடத்தையும் பெற்றனர். போட்டிகளை போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்களான ஜெஸி, மெல்பா, வசந்தி ஆகியோர் நடத்தினர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரிப் பேரவை விழாவில் முதல்வர் சக்தி ஸ்ரீ பரிசுகள் வழங்கினார்.


Next Story