பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x

கீழ்பென்னாத்தூர் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்தார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் அளித்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் எல்லக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் விஷ்வா (வயது 15). இவர், வேடநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

10-ம் வகுப்பு தேர்வு எழுதி வந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து தெருவில் உள்ள வீட்டின் வராண்டாவில் சேலையால் மின்விசிறியில் விஷ்வா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தூக்கில் இருந்து விஷ்வாவை இறக்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் விஷ்வா உயிரிழந்தது தெரிய வந்தது.

சாவில் சந்தேகம் என புகார்

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே, தங்களின் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பாபு கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story