ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது அம்பலம்..!


ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது அம்பலம்..!
x

கைது செய்யப்பட்ட கஞ்சா விற்பனையாளர்கள்

தர்மபுரி அருகே மது விலக்கு பிரிவு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கஞ்சா விற்ற இருவரை கைது செய்தனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கூகுள் பே, போன் பே, பேடி எம் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு இளைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்ளுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட எஸ்.பி கலைச்செல்வனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையில் போலீசார் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

அப்போது அனுமந்தபுரம் அருகே பைக்கில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர். அவர்களை துரத்தி சென்ற போலீசார் பாலக்கோடு அருகே மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 21 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பொட்டலம் பிடிபட்டது.

அதனை தொடர்ந்து அவர்களை விசாரித்ததில் காரிமங்கலம் அருகே ஆல முரசுப் பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 40), வையாலி கொட்டாய் பகுதியை ராமமூர்த்தி (30) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரித்ததில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து இங்கே விற்பனை செய்தது தெரிய வந்தது.

குற்றவாளிகளை பாலக்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி இது குறித்து வழக்குப்பதிவு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்னர்.


Next Story