சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பகாடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா (வயது 22), சின்ராஜ் (20), 18 வயது சிறுவன். இவர்கள் 3 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அருகில் உள்ள காட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் ராஜா உள்பட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





