மேச்சேரி அருகே ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவரை கொலை செய்த மகன் கைது


மேச்சேரி அருகே  ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவரை கொலை செய்த மகன் கைது
x

ஜலகண்டாபுரம் அருகே நிலத்தகராறில் ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

மேச்சேரி

ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள ஜலகண்டாபுரம் ஆடையூர் கிராமம், குடிமானூர் பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 64). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர் தனது முதல் மனைவியை பிரிந்து 2-வது மனைவி ராஜேஸ்வரியுடன் ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி ஊராட்சி சோரையான் வளவு பகுதியில் வசித்துவந்தார். சீரங்கனின் முதல் மனைவி மகனான சரவணன் (35), சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 2-வது மகன் ராஜ்குமார் (31), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். சீரங்கனுக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலமும், புதிதாக கட்டி உள்ள வீடும் உள்ளது. இந்த சொத்தில் பங்கு கேட்டு 2 மகன்களும், சீரங்கனுடன் தகராறு செய்து வந்தனர்.

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சரவணன், ராஜ்குமார், இவருடைய மனைவி யமுனாதேவி ஆகிய 3 பேரும் காரில் சூரப்பள்ளி சோரையான் வளவு வீட்டுக்கு வந்தனர். அப்போது சீரங்கன் இங்கு எதற்கு வந்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ராஜ்குமார், சரவணன் ஆகியோர் சேர்ந்து சீரங்கனை கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் மயங்கி விழுந்த சீரங்கனை, 2 மகன்களும், மருமகளும் அவர்கள் வந்த காரிலேயே தூக்கிச்சென்று பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் சீரங்கனின் முதல் மகன் சரவணன், 2-வது மகன் ராஜ்குமார், இவருடைய மனைவி யமுனாதேவி ஆகிய 3 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக சரவணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story