மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

கரூர்

நெய்தலூர் காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி தலைமை தாங்கினார். நெய்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா வேலாயுதம் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சிவசக்தி வரவேற்று பேசினார். முகாமில் குளித்தலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், கடனுதவி, பசுமை வீடு வழங்கும் திட்டம் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பம் அளித்தல் ஆகியவை நடைபெற்றது. இதில் நெய்தலூர் ஊராட்சி செயலாளர் செந்தில் குமார், கடன் உதவி குழுவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story