பிடாரி காளியம்மன் கோவிலில் சிறப்பு மிளகாய் யாகம்


பிடாரி காளியம்மன் கோவிலில் சிறப்பு மிளகாய் யாகம்
x

வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் சிறப்பு மிளகாய் யாகம் நடந்தது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் அருகே உள்ள வரகூரில் பிரசித்தி பெற்ற பிடாரி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி அமாவாசை நாளான நேற்று காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், வெண்ணெய், பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த யாகசாலையில் சிறப்பு மிளகாய் யாகம் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story