உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. அதன்படி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை சன்னதி தெருவில் நிறுத்துவதால், அங்கு கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story