அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாத 3-வது வெள்ளி

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் பூப்பந்தல் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதிகோன்பாளையம் சக்தி முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் அம்மன் பாலாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், மாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது. இதே போல் வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், உழவர் தெரு மகா மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பச்சையம்மன் கோவில்

தர்மபுரி அரசு மருத்துவமனை எதிரில் உள்ளபச்சையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கொளகத்தூர் பச்சையம்மன் கோவில், காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள அஷ்ட வராஹி அம்மன் கோவில், ஒகேனக்கல் காவிரி அம்மன் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வீடுகளில் வழிபாடு

தர்மபுரி பகுதியில் பெரும்பாலான வீடுகளில் வரலட்சுமி விரதத்தையொட்டி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மங்கள பொருட்கள் உள்ளிட்ட சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story