ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு


ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நேற்று வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு கலங்காமற் காத்தவிநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் சிவன் கோவில்களில் உள்ள குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story