வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு


வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

பிரதோஷத்தையொட்டி வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் நந்திக்கும், ஞானபுரீஸ்வரருக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்கள் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story