சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் புன்னம், குந்தாணிபாளையம் நத்தமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. வேலாயுதம்பாளையம் அருகே நஞ்சை புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர்,பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் காகிதபுரம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு சிவன்கோவில்களில் உள்ள நந்தி பகவானுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.'


Next Story