மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்: சாலையில் டயரை எரித்து போராட்டம்


x
தினத்தந்தி 25 May 2022 8:30 AM GMT (Updated: 25 May 2022 8:55 AM GMT)

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி மீனவர்கள் சாலையில் டயரை தீ வைத்து எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா (வயது 45). இவர் நேற்று முன்தினம் கடல்பாசியை சேகரிக்க சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திராவை கேலி செய்தாக கூறப்படுகிறது. அத்துடன் இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கொலையை மறைக்கும் நோக்கில் உடலை தீவைத்து எரிந்துள்ளனர்.

இந்நிலையில் வடமாநில இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் தற்போது டயரை தீ வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் பாசி சேகரிக்க சென்ற மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் செய்து கொலை செய்த வடமாநில கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இறந்துபோன பெண்ணிற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கடந்த நான்கு மணி நேரத்திற்கு மேலாக ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராட்டக்காரர்கள் தற்போது டயரை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story