பிளஸ்-2 மாணவி தற்கொலை


பிளஸ்-2 மாணவி தற்கொலை
x

பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூர்


கடலூர் அருகே ராமாபுரம் குறிஞ்சிநகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகள் ரம்யா கிருஷ்ணன் (வயது 17). வெள்ளக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் சரியாக படிக்காமலும், வீட்டு வேலை எதுவும் செய்யாமலும் அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இதை அவரது பெற்றோர் கண்டித்து திட்டினர். இதனால் மனவேதனை அடைந்த ரம்யா கிருஷ்ணன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ரம்யா கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந் தார். இது பற்றி பாலகிருஷ்ணன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story