உடற்பயிற்சி செய்த வாலிபர் திடீர் சாவு


உடற்பயிற்சி செய்த வாலிபர் திடீர் சாவு
x

உடற்பயிற்சி செய்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மதுரை

மதுரை

மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஷ்ணு(வயது 27). சம்பவத்தன்று இவர் மாடக்குளம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில்(ஜிம்) பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விஷ்ணு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story