பாப்பாரப்பட்டி அருகே டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை


பாப்பாரப்பட்டி அருகே  டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பாப்பாரப்பட்டி அருகே டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பி.எஸ்.முருகேசன் காலனியை சேர்ந்தவர் குறளரசன் (வயது 29). இவர் டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியில் ஒரே வீட்டில் கடந்த வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பாரப்பட்டி போலீசார் விரைந்து சென்று குறளரசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story