தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இண்டூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பூட்டுக்காரன்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 60). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள். கடந்த 3-ந் தேதி முனுசாமி தனது வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story