இரங்கல் தீர்மானம் முடிந்து தமிழக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு


இரங்கல் தீர்மானம் முடிந்து தமிழக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 10 Jan 2023 5:06 AM GMT (Updated: 10 Jan 2023 5:12 AM GMT)

மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிக்குறிப்பு வாசிக்கப்பட்டு அவை இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சபாநாயகர் மு.அப்பாவு சட்டசபை கூட்டம் 13-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார். இந்தநிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையிலான தமிழக சட்டப்பேரவை கூடியது. 2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது.

சட்டசபையில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரபலமானோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில், தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், அவ்வை நடராஜன், ஓவியர் மற்றும் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலே, எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆகியோரின் மறைவு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.


Next Story