ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது


ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர்  கைது
x

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அம்பை அருகே பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 23) என்பவர் வீட்டில் அருகில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி பதுக்கியது தெரியவந்தது. இதனையடுத்து இசக்கிமுத்தை கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story