கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் போலீசார் நேற்று முன்தினம் தச்சநல்லூர் மதுரை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்றுகொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் தச்சநல்லூர் டவுன் ரோட்டை சேர்ந்த ராஜ் மகன் ராகேஷ் (வயது 20) என்பதும், 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story