கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x

நெல்லை சந்திப்பில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு கருப்பந்துறையை சேர்ந்தவர் ஜவகர்பாபு (வயது 45). இவர் கடந்த 18-ந் தேதி நெல்லை சந்திப்பு பகுதியில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த அஜய் (23) என்பவர் ஜவகர்பாபுவை வழிமறித்து பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததால் இரும்பு கம்பியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜவகர்பாபு நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜயை கைது செய்தனர்.


Next Story