விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே கரையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மகன் சக்திவேல் (வயது 21). தொழிலாளி. கடந்த 2 ஆண்டுகளாக சக்திவேலுக்கு சாியான முறையில் தூக்கம் வராமல் இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் தூக்கம் வராததால் சக்திவேல் அவதி அடைந்து வந்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story