வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:45 PM GMT)

ஆலங்குளத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தங்கம். பன்றி வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய 2-வது மகன் புவனேஸ்வரன் (வயது 22). தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்து வந்தார். புவனேஸ்வரன் தாய் முத்துலட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. நேற்று முத்துலட்சுமியின் நினைவு நாள் என்பதால் புவனேஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் மாலையில் புவனேஸ்வரன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story