வாலிபர் ரெயில் மோதி பலி


வாலிபர் ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:47 PM GMT)

மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்திருந்த வாலிபர், ரெயில் மோதி பலியானார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே மேலஅரியப்பபுரம் நாடாகண்ணுபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சரத்குமார் (வயது 25). கூலித்தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் பாவூர்சத்திரம் அடுத்த மேட்டூர் ெரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சரத்குமார் படுத்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ெரயில் அவர் மீது ஏறிச் சென்றது. இதில் சரத்குமார் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சரத்குமார் உடலை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story