பக்தர்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா


பக்தர்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
x

பக்தர்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து ராஜாளி காடு உபயதாரர்களால் அம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பட்டு பக்தர்குளம் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story