கோவில் வழிபாடு

தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் விஸ்வநாதசாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது சாமி, அம்பாள், நந்தி ஆகியோருக்கு மஞ்சள், திரவியம், பால், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட ெபாருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி அம்பாளுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் பிரகாஷ் சிவாச்சாரியார் தலைமையில் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் ருத்ராட்ச பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story