போலீஸ்காரர்கள் போல் நடித்து பெண்ணிடம் 13 பவுன் நகைகளை அபேஸ் செய்த ஆசாமிகள்


போலீஸ்காரர்கள் போல் நடித்து பெண்ணிடம் 13 பவுன் நகைகளை அபேஸ் செய்த ஆசாமிகள்
x

போலீஸ்காரர்கள் போல் நடித்து பெண்ணிடம் 13 பவுன் நகைகளை ஆசாமிகள் அபேஸ் செய்து சென்றனர்.

திருச்சி

திருச்சி:

திருச்சி பாலக்கரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சொர்ணவேல் கனகராஜ். இவருடைய மனைவி காளிமுத்து (வயது 55). இவர் கடந்த டிசம்பர் மாதம் பாலக்கரை மெயின்ரோட்டில் உள்ள ஒரு கடை அருகே நடந்து சென்றார். அப்போது அவரை 2 பேர் வழிமறித்து தங்களை போலீஸ் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டனர். மேலும், நகைகளை இவ்வளவு அஜாக்கிரதையாக அணிந்து செல்லக்கூடாது. அவற்றை கழற்றி கொடுத்தால் நாங்கள் பாதுகாப்பாக துணியில் சுற்றி தருகிறோம் என்று அறிவுரை கூறினார்கள். இதை நம்பி காளிமுத்துவும் தான் அணிந்திருந்த 13 பவுன் நகைகளை கழற்றி கொடுத்தார். அந்த நகைகளை ஒரு துணியில் சுற்றி தருவதுபோல் நடித்து அவரிடம் கொடுத்துள்ளார். மேலும் 13 பவுன் நகைகளை அபேஸ் செய்து கொண்டு 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிதுநேரத்தில் வீடு திரும்பிய காளிமுத்து நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story