Normal
நடுரோட்டில் அனாதையாக கிடந்த சிறுவன் சடலம்; யாருமே கண்டுகொள்ளாமல் சென்ற அவலம்..!
கிருஷ்ணகிரி அருகே விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடல் அரை மணி நேரமாக யாரும் கண்டுகொள்ளாமல் நடுரோட்டில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓட்டேனூரை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர் சின்னாறு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் சிறுவனின் உடல் நடுரோட்டில் அரை மணி நேரம் அனாதையாக கிடந்தது. அப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் கடந்து சென்ற நிலையில், சிறுவனை யாரும் கண்டு கொள்ளாத சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story