மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
x

நெல்லை அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்து ராஜவல்லிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி தங்கம்மாள் (வயது 70). இவர் சம்பவத்தன்று ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த கோபூஜையில் பங்கேற்றபோது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. பூஜை முடிந்தபின்னர் தங்கம்மாள் வெளியே வந்தபோது, தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவர் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story